சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட். இளைஞர்கள், விவசாயிகள், மகளிருக்கான பட்ஜெட். 2047-ம் ஆண்டு நாடு வல்லரசாக இந்த பட்ஜெட் அடித்தளமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாடு அனைத்து துறைகளிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்கள் சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.