வெள்ளத்தில் அடித்து சென்ற மாற்றுத்திறனாளி தேடுதல் பணியில் தீயணைப்பு படையினர் கலசபாக்கம் அருகே பரபரப்பு

4 months ago 21

கலசபாக்கம், அக். 11: கலசப்பாக்கம் அருகே வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் கடந்த வாரத்தில் பரவலாக பெய்த மழையில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதில் கலசபாக்கம் அடுத்த மட்ட வெட்டு காரப்பட்டு செல்லும் சாலையில் நேற்று மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கலசபாக்கம் ஒன்றியம் மட்ட வெட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்தோஷ்குமார்(27) மாற்று திறனாளி. இவர் நேற்று வீட்டிலிருந்து வெளியே செல்வதற்காக வந்தபோது மட்ட வெட்டு காரப்பட்டு செல்லும் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்க நீண்ட நேரம் போராடினர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்பு படையினர் மாற்றுத்திறனாளி வாலிபரை தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post வெள்ளத்தில் அடித்து சென்ற மாற்றுத்திறனாளி தேடுதல் பணியில் தீயணைப்பு படையினர் கலசபாக்கம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article