சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சீன டிரோன்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டுமே விமானம், துறைமுகம் வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட 200 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரமி அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு டிரோன்கள் கடத்தப்பட்டுள்ளது. சீன டிரோன்களுக்கான தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் கடத்தல் நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சீன டிரோன்கள் கடத்தல் அதிகரிப்பு appeared first on Dinakaran.