வெற்றிகரமாக கடலில் விழ வைக்கப்பட்டது 8 ஆண்டுக்கு முன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்!

1 hour ago 2

சென்னை: 8 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட்டின் இறுதி நிலையான பிஎஸ் 4 இயந்திரம் வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலில் விழ வைக்கப்பட்டது.

விண்வெளி ஆய்வில் சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 உள்ளிட்ட பல்வேறு அரிய சாதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம் இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 104 செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி சாதனை படைத்தது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதால் உலகளவில் ஒரே ஏவுதலில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய நாடு எனும் பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. அதன்பின் அந்த சாதனையை 2021-ம் ஆண்டு பால்கன்-9 ராக்கெட் மூலமாக ஒரே முறையில் 143 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்தது.

Read Entire Article