*கலெக்டர் வழங்கினார்
பெரம்பலூர் : பெரம்பலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.06 லட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கத்துடன் ரூ.4.50 லட்சம் திருமண நிதியுதவிகளை மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்டக் கலெக்டர் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோர், திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.8.06 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்களையும், ரூ.4.50 லட்சம் திருமண நிதியுதவியும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் என 13 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.12.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப் பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்கக் கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்டக் கலெக்டர், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 466 மனுக்கள் பெறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூகப் பாது காப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் (பொ) சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட தாட்கோ மேலாளர் கவியரசு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டஅனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post வெப்ப அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.