வீட்டுமனை பட்டா கோரி விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

5 months ago 31

 

விருதுநகர், அக். 9: விருதுநுகர் பழைய பஸ் நிலையம் அருகில் திராவிடத் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கருவீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் பகுதி அருந்ததியர் மக்களின் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். விருதுநகரில் தந்தை பெரியார், அம்பேத்காருக்கு முழு உருவ சிலை அமைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாலு, ஆதிவீரன், சிபிஎம் முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி முருகன், ஆதிதமிழர் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post வீட்டுமனை பட்டா கோரி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article