வீட்டுமனை ஒதுக்கீடு: முதல்வருக்கு விவசாயி நன்றி

8 months ago 27

சென்னை: தருமபுரி பொம்மிடி அருகே சொந்த நிலத்தை பள்ளி கட்ட தானமாக வழங்கிய விவசாயிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2006ல் ஜாலிப்புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் கட்ட 80 சென்ட் நிலத்தை விவசாயி முருகேசன் தானமாக வழங்கினார். வீடின்றி இருந்த முருகேசன், ரேகடஹள்ளியில் உள்ள மருத்துவமனையில் காவலாளி பணி செய்து அங்கேயே வசிக்கிறார். முருகேசன் வீடின்றி இருக்கும் தகவல் முதல்வர் கவனத்துக்கு வந்ததால், அவருக்கு வீட்டுமனை ஒதுக்கி பட்டா தரப்பட்டது. முதலமைச்சர் உத்தரவுப்படி அமைச்சர் நேரு, ரேகடஹள்ளி கிராமத்தில் குடியிருப்பு வீட்டுமனை ஒதுக்கி பட்டா வழங்கினார். வீட்டுமனை பட்டாவை பெற்றுக் கொண்ட விவசாயி முருகேசன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

The post வீட்டுமனை ஒதுக்கீடு: முதல்வருக்கு விவசாயி நன்றி appeared first on Dinakaran.

Read Entire Article