சென்னை: வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர்களை தங்கு தடையின்றி தொடர்ந்து விநியோகம் செய்வதில் முனைப்புடன் உள்ளோம். எனவே, வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எண்ணெய் துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மண்டல மொத்த எல்பிஜி வாகன உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களது நுகர்வோர்களுக்கு போதுமான எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை தடையின்றி விநியோகித்து வருகின்றன.