வீட்டின் வெளியே விளையாடியபோது ராட்வீலர் நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம்

1 day ago 2

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லலித்குமார் துர்கா பிரியா தம்பதி. இவர்களின் 2வது மகள் சந்திரிகா (6) அங்குள்ளஅரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திரிகாபள்ளிக்குச்சென்று மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது துர்கா பிரியா தனது கைக்குழந்தை மற்றும் 2வது மகளான சந்திரிகாவை தனது தோழி பிரியா என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவீட்டின் வெளியே பேசிக் கொண்டிருந்தார்.அப்போது சிறுமி சந்திரிகாஅந்த வீட்டின் அருகே ராட்வீலர் என்ற நாய் கட்டி வைத்திருந்த பகுதிக்குச்சென்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போதுசிறுமி சந்திரிகாநாய் மீது சிறிய கல்லை தூக்கி எறிந்துள்ளார். இதனால்மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் கயிற்றை அறுத்துக்கொண்டு வந்து சிறுமி சந்திரிகாவை பாய்ந்து கடிக்க துரத்தியது. இதனால்தாய் துர்கா பிரியா தனது மகளை தூக்கிக்கொண்டுபிரியா வீட்டிற்குள் ஓடி மறைந்துள்ளார். பிரியா நாயை இறுக்கமாக பிடித்தும்நாய் கயிறை உருவிக்கொண்டு வீட்டில் பதுங்கி இருந்த சிறுமியை கடித்து குதறியுள்ளது. சிறுமியை நாய் கடித்து குதறுவதைக் கண்ட தாய்க

The post வீட்டின் வெளியே விளையாடியபோது ராட்வீலர் நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article