வீட்டின் முன் விளையாடிய 5 வயது சிறுவன் மாயம்

6 months ago 23

 

ஓசூர், நவ.17: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆகாஷ். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சதீஷ்(4), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை, வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், திடீரென மாயமானான். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

சிறுவன் காணாமல் போகும் போது டீசர்ட் மற்றும் பிஸ்கட் கலர் நைட் பேண்ட் போட்டிருந்தான். இதுகுறித்து ஆகாஷ் பாகலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் வீடு, கடைகளில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளனவா என்றும், அதன்பதிவுகளை பெற்று, மாயமான சிறுவன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post வீட்டின் முன் விளையாடிய 5 வயது சிறுவன் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article