வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!

7 months ago 29
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கடந்த 9ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற பழைய குற்றவாளிகளை கைரேகை பதிவைக் கொண்டு கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தனது வீட்டில் திருட்டு போனதாக வண்ணாம்பாறையை சேர்ந்த மூர்த்தி அளித்த புகார் குறித்து விசாரணை நடத்தி, பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட முத்துராஜா மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, நகைகளையும் பறிமுதல் செய்ததாக சென்னிமலை போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article