விவசாயிகளுக்கு மஞ்சள், நீல ஒட்டுபொறி பயிற்சி

1 week ago 4

திருச்செங்கோடு, மே 6: எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மஞ்சள், நீல ஒட்டுபொறி குறித்து, வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சியளித்தனர். அகரம் கிராமத்தில் நாமக்கல் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள், கிராமபுற அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சின்ன எலச்சிபாளையம் பகுதியில், விவசாயிகளின் நிலத்திற்கு சென்று மஞ்சள் ஒட்டுபொறி, நீல ஒட்டுபொறி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். மஞ்சள் ஒட்டுபொறியின் மூலம் அசுவினி, வெள்ளை போன்ற பூச்சிகளையும், நீல ஒட்டுபொறி மூலம் இலைப்பேன் போன்ற பூச்சிகளையும் கட்டுபடுத்தலாம் என விவசாயிகளுக்கு தெரிவித்தனர். மஞ்சள், நீல ஒட்டு பொறிகள் அமைக்கும் விதம், பயன்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு விளக்கினர். விவசாயிகள் மாணவர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

The post விவசாயிகளுக்கு மஞ்சள், நீல ஒட்டுபொறி பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article