விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பாஜ: கார்கே விமர்சனம்

3 months ago 17

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், “மகாராஷ்டிரா விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பாஜ. 20ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. ரூ.20ஆயிரம் கோடி குடிநீர் திட்டம் பொய்யாகிபோனது. வறட்சி இல்லாத மாநிலமாக மகாராஷ்டிராவை மாற்றுவதாக கொடுத்த வாக்குறுதி பொய்யாகி போனது.

வெங்காயம் மற்றும் சோயாபீன் விவசாயிகளுக்கு ஏற்றுமதி தடை , பருத்தி மற்றும் கரும்பு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி உள்ளிட்டவை விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாஜவின் இரட்டை என்ஜின் அரசை ஆட்சியில் இருந்து அகற்றினால் மட்டுமே விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று மகாராஷ்டிரா மக்கள் முடிவு செய்துள்ளனர்” என்றார்.

The post விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பாஜ: கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article