ISI சான்று பெறாத பொருட்கள் பறிமுதல்.. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவன கிடங்குகளில் BIS அதிகாரிகள் சோதனை..!!

5 hours ago 2

லக்னோ: ஆன்லைனில் மக்கள் பொருட்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் தரச்சான்று பெறாதவையும் கண்டறியப்பட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ISI தரச்சான்று பெறாத ஆயிரக்கணக்கான பொருட்களை அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவன கிடங்குகளில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். லக்னோவில் உள்ள அமேசான் கிடங்கில் BIS எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் உரிய தரச்சான்று பெறாத பொம்மைகள் உள்ளிட்ட 229 பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல குருகிராமில் மற்றொரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் குடிநீர் வைக்கும் உலோக பாட்டில்கள், அலுமினியம் ஃபாயில்கள், பொம்மைகள், PVC வயர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட சான்றிதழ் அற்ற பறிமுதல் செய்யப்பட்டன.

குருகிராமம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் 534 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிதிக்கப்பட்டுள்ளது. இவைதவிர 7000 வாட்டர் ஹீட்டர்கள், 95 ரூம் ஹீட்டர்கள், 40 கேஸ் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2 வாரங்களில் பல்வேறு கட்டங்களாக இந்த சோதனைகள் நடந்ததாக ஒன்றிய அரசும், நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே BIS அமைப்பு சான்று பெற்ற பொருட்களை மட்டுமே விற்குமாறு அமேசான், ஃப்ளிப்கார்ட், மீசோ, மித்ரா, பிக்பாஸ்கெட் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு அந்த அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ISI தரச்சான்று இல்லாத மற்றும் ISI எண் உரிமம் இல்லாத பாதுகாப்பு அபாயம் ஏற்படுத்தகூடியவை என்றும் BIS அமைப்பு தெரிவித்துள்ளது. கடைகளில் உள்ள பொருட்களின் சான்று நிலையை அறிய BIS CARE APP-ஐ பயன்படுத்த வேண்டும் எனவும், ISI முத்திரை இல்லாத பொருட்களை காண நேர்ந்தால் அது குறித்து அந்த செயலியில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ISI சான்று பெறாத பொருட்கள் பறிமுதல்.. அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவன கிடங்குகளில் BIS அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article