விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்- யாகசாலை பூஜை தொடங்கியது

5 hours ago 1

விருதுநகரில் மிகவும் பழமை வாய்ந்த மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய நிலையில் இன்று யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து தினமும் பூஜைகள் நடைபெற உள்ளன. ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று வருகிற 27-ம் தேதி காலை 7.05 மணி முதல் 7.25 மணிக்குள் கோவில் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம், புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. யாகசாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும் அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.

Read Entire Article