விருதுநகருக்கு புதிய அணை, சிப்காட் உள்பட ரூ.603 கோடியில் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2 months ago 10

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்துக்கு புதிய அணை, 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சிப்காட் உள்பட் ரூ.603 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகரில் ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் உட்பட்ட ரூ.101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அதன்பின் விருதுநகர் - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் உள்ள பட்டம்புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

Read Entire Article