விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் காயம்

1 day ago 6

விருதுநகர்: காரி​யாபட்டி அருகே பட்​டாசு ஆலை​யில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்​தில் 3 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 3 பேர் காயமடைந்​தனர். மதுரையைச் சேர்ந்த ராஜசந்​திர சேகரன் என்​பவருக்​குச் சொந்​த​மான பட்​டாசு ஆலை விருதுநகர் மாவட்​டம் காரி​யாபட்டி அரு​கேயுள்ளவடகரை கிராமத்​தில் உள்ளது. இங்கு 30-க்​கும் மேற்​பட்ட அறை​களில் பேன்ஸி ரக பட்​டாசுகள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. 60-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் இங்கு பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று காலை ஓர் அறை​யில் எதிர்​பா​ராத​வித​மாக வெடி விபத்து ஏற்​பட்​டது. இதில், அந்​தக் கட்​டிடம் முழு​வதும் இடிந்து தரைமட்​ட​மானது. அங்கு பணி​யாற்​றிக் கொண்​டிருந்த தொழிலா​ளர்​கள் கல்​குறிச்சி சவுடம்​மாள் (53), தண்​டியனேந்​தல் கருப்​பையா (35) ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மேலும், முரு​கன் (45), பேச்​சி​யம்​மாள் (43), கணேசன் (43), மாரி​யம்​மாள் (40) ஆகியோர் பலத்த காயமடைந்​தனர்.

Read Entire Article