விருதுநகர், பிப்.23: விருதுநகரில் தேசிய திறனாய்வுத் தேர்வினை 6138 மாணவர்கள் எழுதினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை மாதந்தோறும் ரூ.ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம், 4 ஆண்டுளுக்கு ரூ.48 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு, விருதுநகர் மாவட்டத்தில் 18 மையங்களில் நேற்று நடைபெற்றது. தேர்வினை எழுத 6193 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,441 மாணவர்கள், 3,697 மாணவிகள் என மொத்தம் 6,138 தேர்வினை எழுதினர்.
The post விருதுநகரில் தேசிய திறனாய்வு தேர்வு: 6,138 மாணவர்கள் எழுதினர் appeared first on Dinakaran.