லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால்இறுதி போட்டியில் 6ம் நிலை வீரரான செர்பியாவின் 38 வயதான நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஃபிளேவியோ கோபோலியுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-7 என இழந்த ஜோகோவிச் அடுத்த 3 செட்டையும், 6-2, 7-5, 6-4 என கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால்இறுதியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 10ம் ரேங்க் வீரரான அமெரிக்காவின் 22 வயதான பென் ஷெல்டனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் 7-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் 4வது கால்இறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 7-6, 7-6 என்ற செட் கணக்கில், 7ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தினார். இன்று மகளிர் ஒற்றையர் அரையிறுதி போட்டிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, இரவு 7.10 மணிக்கு போலந்தின் இகா ஸ்வியாடெக்-சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் மோதுகின்றனர்.
The post விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: ஜோகோவிச், சின்னர் அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.