“விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் மகத்தான வளர்ச்சி...” - இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் விவரிப்பு

7 months ago 37

திண்டுக்கல்: “அடுத்த 25 ஆண்டுகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கும்,” என இஸ்ரோ விஞ்ஞானி ஆர்.ராஜராஜன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையில், உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையம், பல்கலை நிர்வாகம் இணைந்து நடத்திய விண்வெளி குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (அக்.8) பல்கலை அரங்கில் நடைபெற்றது.பல்கலை. துணைவேந்தர் என்.பஞ்சநதம் தலைமை வகித்தார். பல்கலை. பதிவாளர் எல்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இஸ்ரோ பொதுமேலாளர் ஜே.லோகேஷ் முன்னிலை வகித்தார்.

Read Entire Article