சென்னை: விண்ணப்பித்த 30 நாளில் பட்டா தர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை வரவேற்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பட்டா மாறுதல், பட்டாவில் பெயரைச் சேர்ப்பது, நீக்குவது போன்ற விண்ணப்பங்களும் இருக்கின்றன. அடுக்கடுக்காக அதிகாரிகள் இருக்கும்போது விண்ணப்பங்கள் ஏன் மலைபோல் தேங்கி குவிகின்றன என்பது புரியாத புதிர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய ஆணை இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
The post விண்ணப்பித்த 30 நாளில் பட்டா தர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணை: ப.சிதம்பரம் வரவேற்பு appeared first on Dinakaran.