சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். 2 நாட்கள் சென்னையில் தங்கி இருக்கப்போவதாக ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ராமதாஸை 2 நாட்களுக்கு முன்பு அன்புமணி சந்தித்துவிட்டு சென்ற நிலையில் தற்போது ராமதாஸ் சென்னை புறப்பட்டுள்ளார். சென்னையில் அன்புமணியை சந்தித்து பேசுவது குறித்து எந்த தகவலையும் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை.
The post தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார் ராமதாஸ் appeared first on Dinakaran.