“விடுபட்டோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை”- கனிமொழி எம்.பி. தகவல்

5 months ago 33

5எகோவில்பட்டி: “தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் செய்து வருகிறார்” என்று எப்போதும்வென்றானில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எப்போதும்வென்றான் கிராமத்தில் இன்று (அக்.2) கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி‌.மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எப்போதும்வென்றான் ஊராட்சி மன்றத் தலைவர் செ.முத்துக்குமார் வரவேற்றார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினர்.

Read Entire Article