விஜய்யின் பரந்தூர் நிகழ்வுக்கு போலீஸார் கட்டுப்பாடு: இடம் தெரிவில் இழுபறி

4 months ago 16

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை விஜய் சந்திக்கும் நிகழ்ச்சியை அவரின் பாதுகாப்பு கருதி திருமண மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர் ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இதனை எதிர்த்து 908 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை வரும் ஜனவரி 20-ம் தேதி சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவர் சந்திப்பு நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக இழுபறி ஏற்பட்டுள்ளது.

Read Entire Article