விஜயலட்சுமியை ஏமாற்றி 7 முறை கருக்கலைப்பு; சீமான் மீதான பாலியல் புகார் தீவிரமானது - ஐகோர்ட்

9 hours ago 1

சென்னை: திரு​மணம் செய்து கொள்​வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றிய​தால் விஜயலட்​சுமி சுமார் 7 முறை கருக்​கலைப்பு செய்​துள்ளார். எனவே, சீமானுக்கு எதிரான புகார் தீவிர​மானது என்ப​தால் அதை ரத்து செய்ய முடி​யாது என உயர் நீதி​மன்றம் தீர்ப்​பளி்த்​துள்ளது. நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளரான சீமான் மீது வளசர​வாக்கம் போலீ​ஸார் கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் துன்​புறுத்தல் வழக்​குப்​ப​திவு செய்​துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனு, உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்பாக கடந்த பிப்​.17-ம் தேதி விசா​ரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடி​யாது என மறுப்பு தெரி​வித்த நீதிபதி, இந்த வழக்​கில் 12வாரத்​துக்​குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்​டும் என போலீ​ஸாருக்கு உத்தர​விட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்​தார்.

Read Entire Article