
கவுகாத்தி,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரனா மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 183 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் கெய்க்வாட் 63 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் ஹசரங்கா விக்கெட் கைப்பற்றியதை அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பட ஸ்டைலில் கொண்டாடியது வைரலாகி வருகிறது.