சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்பிரதேசம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் நீதிபதி எந்த முறையில் கலந்து கொண்டாரா என்ற வினா எழுகிறது. சட்டவிதிகளை மீறி இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விஷம் கக்கும் வெறுப்பு பேச்சும் பேசியுள்ளார்.