சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 98-வது இசை விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.
மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, ‘தி இந்து’ குழுமம் வழங்கும் 1 லட்ச ரூபாய் பணமுடிப்புடன் கூடிய சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை அளித்து சிறப்புரை ஆற்றினார்.