வாலிபரை விரட்டிச்சென்று சரமாரி கத்தி வெட்டு 2 பேர் மீது வழக்கு திருவண்ணாமலையில் முன் விரோத தகராறில்

4 months ago 14

திருவண்ணாமலை, டிச.20: திருவண்ணாமலையில் முன்விரோத தகராறில் வாலிபரை ஓடஓட விரட்டி வெட்டிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ராசய்யன்(28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் சரத்குமார் என்பவருக்கும் இடையே, சாட்சி கையெழுத்திட்டது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த ராசய்யாவை வழிமறித்த சரத்குமார் மற்றும் அவரது நண்பர் ஜீவா என்கிற ரஞ்சித் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

அதனால், பைக்கை விட்டு விட்டு ராசய்யா தப்பி ஓடியுள்ளார். ஆனாலும், விரட்டிச்சென்று கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். படுகாயம் அடைந்த ராசய்யாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக நேற்று திருவண்ணாமலை டவுன் போலீசில் ராசய்யா கொடுத்த புகாரின் பேரில், சரத்குமார் மற்றும் ஜீவா என்கிற ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post வாலிபரை விரட்டிச்சென்று சரமாரி கத்தி வெட்டு 2 பேர் மீது வழக்கு திருவண்ணாமலையில் முன் விரோத தகராறில் appeared first on Dinakaran.

Read Entire Article