வாலிபரை தாக்கி பணம் பறித்த இரு நண்பர்கள் கைது

3 months ago 12

தூத்துக்குடி,பிப். 10: தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த ஆல்வினின் மகன் அச்சுதன் (20), வல்கனைசிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களான காமநாயக்கன்பட்டி மகிமை நகரை சேர்ந்த ராஜசேகரனின் மகன் வரதராஜன் (27), தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த கருப்பசாமியின் மகன் கார்த்திக் (37) மற்றும் ஒருவருடன் பாளை. ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரேயுள்ள பாலத்தின் கீழே அமர்ந்து மதுபானம் அருந்தியதாக தெரிகிறது.அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சுதனை 3பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அச்சுதனின் பையில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணமும் திருடப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை எஸ்ஐ மாணிக்கராஜா வழக்குப் பதிந்து வரதராஜ், கார்த்திக் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கி பணம் பறித்த இரு நண்பர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article