வாலிகண்டபுரத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாப பலி

4 months ago 12

 

பெரம்பலூர்,பிப்.15: வாலிகண்டபுரம் கிராமத்தில் கட்டிட வேலையின் போது மின்சாரம் தாக்கி கொத்தனார் இறந்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் கிராமத்தில் முல்லா தெருவிலுள்ள பள்ளி வாசல் அருகில் திருமண மண்பம் கட்டும் வேலை நடந்து வருகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ராதாகிருஷ்ணன்(40) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

நேற்றும் திருமண மண்டபத்திற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அப்போது சுவற்றுக்கு சிமெண்டு பூசும் பொழுது மட்டபலகை மின்சார கம்பியில் மோதிய போது அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மின் கம்பி மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி ராதாகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ மூலம் அழைத்துச் சென்றனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராதா கிருஷ்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன ராதா கிருஷ்ணனுக்கு கலைச் செல்வி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிகண்டபுரத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article