வாலாஜாபாத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் வீட்டு உபயோக பொருட்கள் பழுது

4 hours ago 2

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் பேரூராட்சியை சுற்றிலும் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வாலாஜாபாத்தில் முக்கிய பகுதியாக விளங்கும் பேருந்து நிலையத்தின் அருகாமையில் வினோதா நகர் குடியிருப்பு பகுதி உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் அருகாமையில் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமின்றி பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்நிலையில், எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும் இந்த குடியிருப்பு பகுதியில் நாள்தோறும் மின் வினியோகம் குறைந்த மின் அழுத்தத்துடன் விநியோகிக்கப்படுகின்றன.இதனால் இங்குள்ள மக்கள் மின்விநியோக அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த முடியாமல் நாள்தோறும் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வாலாஜாபாத் பேரூராட்சியின் மையப் பகுதியாக விளங்குவது பேருந்து நிலையம்.

இதன் அருகாமையில் வினோதா நகர் குடியிருப்பு பகுதி உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு மின்விநியோகம் அவ்வப்பொழுது தடை செய்யப்படுவது மட்டுமின்றி மின்னழுத்தமும் குறைந்து காணப்படுகின்றன. இதனால், வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ், மிக்ஸி, ஏசி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாளுக்கு நாள் பழுதாகி காணப்படுகின்றன. இங்கு விநியோகிக்கப்படும் தாழ்வான மின் அழுத்தம் குறித்து பலமுறை மின்வாரியத்திடம் தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் முறையாக பராமரிக்கப்படாததால் இது போன்ற மின்னழுத்தம் குறைவாக விநியோகிக்கப்படுகிறது. இதுபோன்ற நிலையில் வினோதா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள், வங்கிகள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்படும் நிலையில் அதற்கேற்ப புதிய டிரான்ஸ்பர் அமைத்து சீரான மின் விநியோகம்‌. வழங்கிட வாலாஜாபாத் மின்வாரிய துணை மின் நிலைய அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

The post வாலாஜாபாத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் வீட்டு உபயோக பொருட்கள் பழுது appeared first on Dinakaran.

Read Entire Article