வாரணாசியில் இன்று ரூ.6,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

8 months ago 40
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு விமான நிலையத் திட்டங்களை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கிவைக்கிறார். லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடம் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். ஆக்ரா, தர்பங்கா, பாக்தோக்ரா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களுக்கான புதிய பணிகளையும், வாரணாசி விளையாட்டு வளாக மேம்பாட்டுப் பணிகளையும், ஆலயங்களுக்கான சுற்றுலாத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். முன்னதாக,  பிற்பகல் 2 மணிக்கு ஆர்.ஜே.சங்கரா மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்துவைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article