நாகை அருகே வயது முதிர்வால் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதியில்லாததால், அவரது மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர்.
நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் காந்திமகான் கடற்கரை சாலையில் உள்ள தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தைலமரத் தோப்பில் நேற்று முன்தினம் மாலை கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், நாகை டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் அழுகிய நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடல் இருந்தது தெரியவந்தது.