
இந்தவார ராசிபலன்:-
மேஷம்
மனதில் சமநிலையோடு எந்த விஷயத்தையும் செய்ய முயற்சிக்கும் மேஷம் ராசியினரை இந்த வாரம் நன்மைகள் நாடித்தேடி வரும். ராசியில் உள்ள சுக்கிரன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தித் தருவார். பால்பொருள் உற்பத்தி, ஓட்டல் தொழில் துறையினர், ரசாயன பொருள் உற்பத்தி ஆகிய தொழில் பிரிவினர் முன்னேற்றம் காண்பர். கலைத்துறை, பேஷன் டிசைன், சொகுசு வாகன வியாபாரிகள் முன்னேற்றம் அடைவார்கள். தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களில் ஆதாயம் பெறுவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் எரிவாயு, நிதி நிறுவன, ஜுவல்லரி பங்குகள் மூலம் லாபம் பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி குறித்த செய்திகளை தேடிச்சென்று அறிந்து கொள்வார்கள். தலைசுற்றல், தொண்டை வலி, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு விலகும். உடல் உழைப்பு தொழிலாளர்கள் உடைய குழந்தைகளுக்கு ஆடை மற்றும் அன்னதானம் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டு.
ரிஷபம்
காரிய வெற்றியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் வண்டி வாகன, ஆபரணச் சேர்க்கை உண்டு. குரு மற்றும் சனி ஆகிய இரண்டு முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளன. பொறியியல், ரசாயன தொழில் துறையினர், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு இது சாதகமான காலம். ஆராய்ச்சியாளர்கள், எண்ணெய், நகை-ஜவுளி வியாபாரிகள் நீண்ட கால திட்டங்களை நிறைவேற்ற சந்தர்ப்பம் அமையும். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயங்களை பெறுவார்கள்.
ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசுத்துறை, ஹோட்டல், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய பல அடுக்குமாடி கட்டுமான பணிகளை தொடங்குவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எழுதும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். வயிற்று வலி, கை கால் வலி, முதுகு வலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சை மூலம் விலகும். முடிந்த பொழுது ஒருவேளை உண்ணாவிரதம் இருப்பதும், இரவு நேரங்களில் வயதானவர்களுக்கு அன்னதானம் செய்வதும் நன்மைகளை அளிக்கும்.
மிதுனம்
எந்த ஒரு விஷயத்திலும் மாற்றுக் கருத்துகளை கேட்டு அதன்படி செயல்படும் மிதுனம் ராசியினர் இந்த வாரம் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள். ராசியில் உள்ள ராசி அதிபதியும், குருவும் மனதில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவார்கள். சிறுதொழில் துறையினர், கட்டுமான பொருள், வேளாண் விளைபொருள் வியாபாரிகள் திட்டமிட்ட வளர்ச்சி கிடைத்து மகிழ்வர். சுற்றுலா, பத்திரிக்கை, ஆசிரியர், மின்னணு தொழிலில் லாபம் உண்டு. தனியார் உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமானத் திட்டங்களை பிரமாண்டமாக தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வாகனம், மருத்துவமனை, கட்டிட பொருள் நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவர். கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டு அரசாங்க போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவர். பல இடங்களுக்கும் அலைந்து திரிவதால் உடல் அசதியும், மனச்சோர்வும் ஏற்பட்டு சிகிச்சை மூலம் விலகும். துர்க்கை மற்றும் காளி கோவில்களில் மாலை நேரங்களில் சிவப்பு நிற மாலைகளை சமர்ப்பித்து, வழிபாடுகள் செய்தால் நன்மைகள் உண்டு.
கடகம்
யார் சொல்வதையும் அப்படியே நம்பி விடாமல் அதற்கு என்ன அர்த்தம் என்பதை ஆராயும் கடகம் ராசியினர் இந்த வாரம் புதிய தொடர்புகளை பெறுவார்கள். தனம் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் ராகு கேது சம்பந்தப்படுவதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட வேண்டும். இரும்பு, எந்திரம், ஜவுளித்துறை, ஏஜென்சி ஆகிய தொழில் துறையினர் அயராமல் பணியாற்ற வேண்டும். வழக்கறிஞர்கள், சரக்கு போக்குவரத்து, சாலையோர கடை வியாபாரிகள் லாபம் பெறுவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்திருந்த ஆதாயங்களை பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்கி லாபம் அடைவர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண் விளைபொருள், அரசு கட்டுமான நிறுவன பங்குகளில் லாபம் அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்து மேல்படிப்பு குறித்து தீர்மானிப்பது நல்லது. ஜீரண கோளாறு, உடல் அசதி ஆகியவை ஏற்பட்டு தகுந்த ஓய்வு மூலம் விலகும். எந்த கோவிலாக இருந்தாலும் மூன்று முறை கருவறையை வலம் வந்து வணங்கி பிரார்த்தனை செய்வதன் மூலம் சிரமங்கள் அகலும்.
சிம்மம்
அனைவரையும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டு வெற்றியில் மற்றவர்களுக்கும் பங்களிக்கும் இயல்பு கொண்ட சிம்மம் ராசியினர் இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் சனி இருந்தாலும், லாப ஸ்தானத்தில் உள்ள குரு உங்களை உயர்த்தி மகிழ்வார்.கணினி, மருந்து, இரும்பு, ஆராய்ச்சி தொழில் துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். உணவகம், மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் மக்கள் மத்தியில் மதிப்பு பெறுவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல் விலகி பெருமூச்சு விடுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் தொழிலில் புதிய மாற்றங்களை செய்வர். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருத்துவமனை, மசாலா பொருள் தயாரிப்பு, ஓட்டல் நிறுவன பங்குகளால் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப விஷயங்களை தேடிச்சென்று கற்பார்கள். கைகால் வலி, காய்ச்சல், சளித்தொல்லை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். அம்மன் கோவிலுக்கு செவ்வரளி மாலை சமர்ப்பணம் செய்வதும், பக்தர்களுக்கு பிளியோதரை பிரசாதம் வழங்குவதும் நன்மை தரும்.
கன்னி
மனதில் குழப்பம் இருந்தாலும் எந்த விஷயத்தையும் தீர்மானமாக நடத்தி முடிக்கும் கன்னி ராசியினர் இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் திடீர் அதிர்ஷ்டங்களை உருவாக்குவார். தொழில்நுட்ப ஆலோசகர்கள், அச்சகம், ஹெர்பல் பொருள் தயாரிப்பு தொழில் துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவர். ஜவுளி, கலைத்துறை, மளிகை, காய்கறி வியாபாரிகள் திட்டமிட்ட நன்மைகள் கிடைக்கப் பெறுவர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரி மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை தொடங்கி முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் வேளாண்மை, இயற்கை எரிவாயு, வங்கி நிறுவன பங்குகளில் ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனதில் நினைத்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதில் இணைவார்கள். மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களை வணங்கி ஆசிகளை பெறுவதும், சன்னியாசிகளுக்கு பழங்களை சமர்ப்பிப்பதாலும் நன்மைகள் உண்டு.
துலாம்
இன்று நன்ராக செயல்பட்டால், நாளை நன்றாக அமையும் என்ற கொள்கை கொண்ட துலாம் ராசியினருக்கு உற்றார், உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். ஐந்தாம் இடத்தில் உள்ள குரு ராசியை பார்ப்பதால் நன்மைகள் வீடு தேடி வரும். சிறு தொழில் துறையினர், மருத்துவர்கள், பொறியாளர்கள் நல்ல செய்திகள் கிடைக்கப்பெறுவார்கள். தொழில்நுட்ப கருவிகள், மருத்துவ உபகரண வியாபாரிகள் லாபம் அடைவர். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை அறிமுகம் செய்வார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் அரசு நிறுவனம், மின்சார, எரிவாயு பங்குகள் மூலம் லாபம் அடைவார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக சுற்றுலா சென்று வருவார்கள்.அஜீரண கோளாறு, வயிற்று வலி, தொண்டை வலி ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் அகலும். அன்னை வழி உறவினர்களுக்கு பண உதவி மற்றும் பரிசுகள் வழங்கி அவர்களுடைய ஆசிகளை பெறுவது நன்மை தரும்.
விருச்சிகம்
மற்றவர்களுக்கு உதவி செய்தால் மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு, புதிய நம்பிக்கைகள் ஏற்படும். ராசி அதிபதி பத்தாம் இடத்தில் நட்பு ரீதியாக சஞ்சரிப்பது சமூகத்தில் புதிய அந்தஸ்தை பெற்றுத்தரும். கட்டிட கலைத்துறை, சினிமா, மீடியா தொழில் துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். போட்டோகிராபி, நிதி ஆலோசனை, கட்டுமான பொருள்கள் வியாபாரிகள் வெற்றியடைவர். தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான பணித்திட்டங்களை கவனமாக பார்வையிட வேண்டும். ஷேர் மார்க்கெட் பிரிவினர் சிமெண்டு, விமான நிறுவனம், எரிவாயு நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளை பெறுவார்கள். தலை சுற்றல், வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். பெருமாள் கோவில் தாயாருக்கு சிவப்பு நிற மாலைகளை வழங்குவதும், மஞ்சள் வஸ்திரங்கள் வழங்குவதன் மூலமும் நன்மைகள் உண்டு.
தனுசு
எண்ணம், சொல், சிந்தனை ஆகியவற்றில் சுதந்திரமாக நடந்து கொள்ள விரும்பும் தனுசு ராசியினர் இந்த வாரம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவர். ஏழாம் இடத்தில் உள்ள குரு மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ள சுக்கிரன் ஆகிய சுப கிரகங்களால் தடைபட்ட வெற்றி கைவந்து சேரும். சுற்றுலா, ஓட்டல், ஆடை, ஆபரண தயாரிப்பு தொழில் துறையினர் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயம் பெறுவார்கள். பத்திரிக்கை துறை, இவன்ட் மேனேஜ்மென்ட், ஏற்றுமதி-இறக்குமதி பொருள் வியாபாரிகள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். அரசு மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவார்கள்.
ரியல் எஸ்டேட் துறையினர் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிடவும். ஷேர் மார்க்கெட் பிரிவினருக்கு எரிவாயு, விமான, கப்பல் நிறுவன பங்குகளால் ஆதாயம் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல் படிப்பு குறித்த தீர்மானமான முடிவை எடுப்பார்கள். காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். முடிந்தவரை மௌனமாக இருப்பதும், காளி, துர்க்கை கோவில்களில் மாலை நேரங்களில் வலம் வந்து வணங்குவதும் நன்மைகளை தரும்.
மகரம்
மற்றவர் மகிழ்ச்சியில் பங்கேற்பதை விட துன்பத்தில் பங்கேற்க முன்னிற்கும் மகரம் ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் ஆடை ஆபரண சேர்க்கையை ஏற்படுத்துவார். மனித வளம், மருத்துவம், விவசாயம் ஆகிய தொழில் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். உணவகம், வாகனம், கட்டுமான பொருள் வியாபாரிகள் மனதில் நினைத்த விஷயங்களை செய்யலாம். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தில் மதிப்பு பெறுவார்கள்.
ஷேர் மார்க்கெட் பிரிவினர் ஓட்டல், மசாலா உற்பத்தி நிறுவனம், இன்ஜினியரிங் நிறுவன பங்குகள் மூலம் லாபம் பெறலாம். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விளையாட்டுகளை கற்றுக் கொள்வதில் உற்சாகமாக இருப்பார்கள். மன உளைச்சல் காரணமாக தலைசுற்றல், தலைவலி மற்றும் கை-கால் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் அகலும். கோவிலில் நடக்கும் சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்பதும், கோவில் வளாகங்களை சுத்தம் செய்வதன் மூலமும் பல சிக்கல்கள் விலகும்.
கும்பம்
எது நடந்தாலும் இரண்டில் ஒன்று பார்ப்போம் என்ற எண்ணம் கொண்ட கும்பம் ராசியினர் இவ்வாரம் மனதில் உறுதியுள்ள மனிதர்களாக உலா வருவார்கள். ராசியில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் தடைபட்ட காரியங்கள் நல்ல விதமாக முடியும். கலைத்துறை, பெட்ரோல் பங்க் தொழில், வேளாண் விளைபொருள் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்க பெறுவார்கள். அதிகாரிகள், சிறு தொழில் முனைவோர், ஆடை-ஆபரண வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவர். அரசு உத்தியோகஸ்தர்கள் அனைத்துப் பணிகளிலும் நேரடியாக இறங்கி செயல்பட வேண்டும்.
ரியல் எஸ்டேட் துறையினர் புதிய கட்டுமான திட்டங்களை தொடங்கலாம். ஷேர் மார்க்கெட் பிரிவினர் மருந்து உற்பத்தி நிறுவன, ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் மூலம் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி குறித்த தகவல்களை பெற வெளியூர் பிரயாணம் செல்வார்கள். தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவம் மூலம் குணமடையும். சிவன்-பார்வதி அல்லது பெருமாள்-தாயார் கோவிலில் அபிஷேகத்துக்கு பசும்பால் அளிப்பதும், அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்குவதும் நன்மைகளை தரும்.
மீனம்
குழப்பமான சூழ்நிலைகளிலும் தெளிவாக சிந்தித்து செயல்படும் தனித்தன்மை கொண்ட மீனம் ராசியினர் இந்த வாரம் மகிழ்வுடன் இருப்பீர்கள். தன ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் குடும்பத்தில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். மின் சாதன தயாரிப்பு தொழில்துறை, எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் புதிய வாய்ப்புகள் பெற்று முன்னேறுவார்கள். பத்திரிக்கை துறை, மருத்துவம், சந்தை வியாபாரிகள் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவர். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர்.
ரியல் எஸ்டேட் துறையினர் குழப்பங்கள் அகன்று தெளிவாக புதிய திட்டங்களை தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் பிரிவினர் பெட்ரோலிய நிறுவனம், சுற்றுலா நிறுவன பங்குகளில் லாபம் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் வென்று கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். அஜீரணம் மற்றும் வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டு தக்க மருத்துவ சிகிச்சையால் நீங்கும். முதியோர்களுக்கு மதிய உணவு தானமாக வழங்குவதும், மாலை நேரத்தில் பசுக்களுக்கு வெண்பூசணி வழங்குவதும் நன்மைகளை தரும்.
