
சென்னை,
வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் வரும் பிப்ரவரி 14 மற்றும் 15-ந்தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன்படி பிப்ரவரி 14-ந்தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும். அதே போல், பிப்ரவரி 15-ந்தேி கிளாம்பக்கத்தில் இருந்து 240 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.