“வாய்ப்பு வந்தபோது நான் அக்கறை​ காட்டவில்லை” - அதிமுக பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியது என்ன?

1 week ago 2

ஈரோடு: அதிமுக ஒன்றாக இருக்க வேண்​டும் என்று கருதி​யவன் நான். விட்டுக்​கொடுக்​கும் மனப்​பான்​மையோடு இருக்​கும் என்னை சோதித்​துப் பார்க்​காதீர்கள் என்று அதிமுக முன்​னாள் அமைச்சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபி​யில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: நான் பல்லாண்​டு​களாக அரசி​யலில் இருக்​கிறேன். பல தலைவர்களை சந்தித்​துள்ளேன். என்னை யாரும், எதிலும் சிக்​கவைக்க முடி​யாது.எம்ஜிஆர், ஜெயலலிதா பாதை​யில் செல்​லும் எனக்கு, அவர்​கள்​தான் வழிகாட்​டிகள். அதிமுக தொடங்​கப்​பட்​ட​போது நான் சாதாரண தொண்​டன். எனக்கு பொருளாளர் பதவியை வழங்கி, பொதுக்​குழுவை நடத்​து​மாறு கூறியவர் எம்ஜிஆர். அவரது உத்தர​வின் பேரில் நாங்கள் பச்சை குத்​திக் கொண்​டோம்.எம்ஜிஆருடன் 14 முறை தமிழகம் முழு​வதும் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளேன். கிராமம் வாரியாக அத்தனை நிர்​வாகிகள் பெயரும் எனக்​குத் தெரி​யும்.

Read Entire Article