வானில் ஒரே நேரத்தில் அணிவகுத்த 6 கோள்கள்: அரிய நிகழ்வை சென்னையில் கண்டு ரசித்த பொதுமக்கள்

5 months ago 24

சென்னை: வானில் ஒரே நேரத்​தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை சென்னை​யில் பொது​மக்கள் ஆச்சரி​யத்துடன் கண்டு ரசித்தனர். சூரியக் குடும்பத்​தில் உள்ள கோள்கள் தங்கள் சுற்று​வட்டப் பாதை​யில் ஒன்றை ஒன்று சந்திக்​கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்​போது ஏற்படு​வதுண்டு.

அதன்படி 6 கோள்கள் ஒரே நேர்​கோட்​டில் அணிவகுத்து வரும் அரிய நிகழ்​வானது தற்போது அரங்​கேறி வருகிறது. அந்த வகையில் வெள்ளி, வியாழன், சனி, செவ்​வாய், நெப்​டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்​கோட்​டில் தென்​பட்டு வருகின்றன. இவற்றை காண்​ப​தற்காக அறிவியல் அமைப்புகள் சார்​பில் நாடு முழு​வதும் சிறப்பு ஏற்பாடுகள் ஜன.25-ம் தேதி வரை மேற்​கொள்​ளப்​பட்​டுள்ளன.

Read Entire Article