வாணியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

6 months ago 20

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை, 65.27 அடி கொள்ளளவு கொண்டது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி ‘பெஞ்சல்’ புயல் காரணமாக கடந்த, முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து, 2500 கனஅடி தண்ணீரும், 2ம்தேதி 3750 கனஅடி தண்ணீரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 325 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது அணை நீர்மட்டம் 63.30 அடியாகவும், நீர் இருப்பு, 395.92 (418) மில்லியன் கன அடியாக உள்ளது.

The post வாணியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article