சென்னை: ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி வழங்கி உள்ளது. 5 ஆண்டுக்கு ரூ.1,185 கோடியில் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 6 லட்சம் மகளிருக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18,000 மகளிருக்கு சுய தொழில் தொடங்குவதற்கான பல்வேறு பயிற்சிகள். உதவிகள் வழங்கப்பட உள்ளது.
The post ரூ.1,185 கோடியில் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி..!! appeared first on Dinakaran.