வாடகை பாக்கி விவகாரம் வீட்டின் உரிமையாளரை தாக்கிய தம்பதி கைது

3 hours ago 1

 

திருச்சி. மே 7: திருச்சியில் வீட்டின் வாடகை பாக்கியை கேட்டபோது வீட்டின் உரிமையாளரை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர் மேல கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (41) இவருக்கு சொந்தமான வீடு செங்குளம் காலனியில் உள்ளது. பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த கார்த்தி (32) என்பவருக்கு அந்த வீட்டினை 3 வருடத்திற்கு மாத வாடகைக்கு விட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக கார்த்திக் வாடகை பாக்கி தரவில்லை என கூறப்படுகிறது. தங்கதுரை வீட்டிற்கு சென்று வாடகை பாக்கி கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், கார்த்திக் தங்கதுரையை கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு கண், முகத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து கார்த்தி (32) மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி (30) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அலெக்ஷ் மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாடகை பாக்கி விவகாரம் வீட்டின் உரிமையாளரை தாக்கிய தம்பதி கைது appeared first on Dinakaran.

Read Entire Article