மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசிவிடுபவர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா. அதிலும், ஆளும் திமுக-வை தாக்குவதில் அண்ணாமலைக்கும் ஒருபடி மேல் என்று சொல்லலாம். அதிமுக - பாஜக கூட்டணி, மும்மொழிக் கொள்கை விவகாரம், விஜய் அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஹெச்.ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்? நிதி தரமாட்டேன் என்று சொல்வது எல்லாம் சர்வாதிகாரம் இல்லையா?