வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் வங்கி விபத்து காப்பீடு தொகை வரைவோலையை சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவியிடம் வழங்கினார் காவல் ஆணையாளர்

7 hours ago 2

சென்னை: சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களின் நலன்களில் பல்வேறு திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக காவல் ஆணையாளர் அ.ஆருண் தலைமையில் கூடுதல் ஆணையர் தலைமையிடம் நேரடி மேற்பார்வையில் காவலர் நலன் மற்றும் காவலர் குடும்பத்தினர் நலன் குறித்தும், மருத்துவம், கல்வி , குடியிருப்பு வசதிகள், கேண்டீன் வசதிகளுடன் பணி செய்து வரும் காவல் ஆளிநர்கள் பணியின் போது உயிர்நீத்த காவல் துறை குடும்பத்தினருக்கு உரிய வழிகாட்டுதல்களோடு வேண்டிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வழங்கிட அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வளராக பணிபுரிந்து வந்த திருப்பத்துரைச்சேர்ந்த தேசிங்குராஜன், வ/55 கடந்த 10.12.2024 அன்று கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தவர் கடந்த 13.01.2025 அன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவி ஓரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

காவல் துறையினரின் விபத்து இழப்பு காப்பீடு தொகை, காவல் துறையின் பரித்துரையின் பேரில், பணியில் இருக்கும் காவல் துறையினர் விபத்தில் இறக்க நேரிடும் போது ரூபாய் 30 லட்சம் விபத்து காப்பீடு வழங்குவதற்கு வங்கிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தேசிங்குராஜன் ஆக்சிஸ் வங்கியில் காவல்துறையினருக்கான திட்டத்தில் சேர்ந்து, சம்பள கணக்கை பதிவு செய்து கொண்டதால் அவருக்கு உரிய விபத்து காப்பீடு தொகை பெறுவதற்காக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டு இழப்பீடு தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பேரில் வேளச்சேரி கிளை ஆக்சிஸ் வங்கி இழப்பீடு தொகை ரூ.30 லட்சத்தை வழங்கிட ஒப்புக்கொண்டு இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மனைவி ராஜலட்சுமி மற்றும் குடும்பத்தினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இன்று (24.06.2025) நேரில் வரவழைத்து, ஆக்சிஸ் வங்கியின் விபத்து காப்பீடு தொகை ரூ.30 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினார். இந்நிகழ்வின்போது, துணை ஆணையாளர் (நலன் மற்றும் எஸ்டேட்) D.N.ஹரிகிரண் பிரசாத், மற்றும் ஆக்சிஸ் வங்கி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் வங்கி விபத்து காப்பீடு தொகை வரைவோலையை சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவியிடம் வழங்கினார் காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.

Read Entire Article