வாகன தாக்குதல்: அமமுகவினர் மீது நடவடிக்கை கோரி மதுரை எஸ்.பி.யிடம் ஆர்.பி.உதயகுமார் மனு

6 months ago 16

மதுரை: “அதிமுகவினர் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும்” மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (நவ.11) காலை புகார் மனு ஒன்றை அளித்தார்.

மதுரை மாவட்டம், மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கட்சிக்காரர்களுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அமமுகவினர் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இத்தாக்குதலில் அதிமுக மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read Entire Article