வாகன உதிரிபாகங்கள் கடை உரிமையாளர் வீட்டில் 30 சவரன் திருட்டு வேலூர் சார்பனாமேட்டில்

2 weeks ago 7

வேலூர், ஏப்.25: வேலூர் சார்பனாமேட்டில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சார்பனாமேடு மராட்டா தெருவை சேர்ந்தவர் பாபுசாகீப்(72). இவர் பைபாஸ் சாலையில் லாரிகளுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜிலான்பேகம். பாபுசாகீப்புக்கு 5 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருக்கும் பீரோ திறந்து கிடந்ததாம். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி பீரோவில் நகைகளை சரிபார்த்தபோது, அதில் வைத்திருந்த 30 சவரன் நகைகள் காணவில்லையாம். இதை யாரோ திருடிச்சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை செய்தனர். மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வாகன உதிரிபாகங்கள் கடை உரிமையாளர் வீட்டில் 30 சவரன் திருட்டு வேலூர் சார்பனாமேட்டில் appeared first on Dinakaran.

Read Entire Article