சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.72,360க்கு விற்பனை

1 month ago 7

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.72,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.9,045க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.110க்கும், ஒருகிலோ ரூ.1,10,000க்கும் விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம் என்பதை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

இதற்கிடையில் கடந்த 6ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 வரை உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,800க்கு விற்பனையானது. தொடர்ந்து 7ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.72,600க்கு விற்பனையானது. இந்த விலை குறைவு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130க்கும், பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.73,040க்கும் விற்பனையானது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ஒரு பவுன் ரூ.72,120க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.72,360க்கு விற்பனை ஆகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

The post சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.72,360க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article