“வளர்ச்சியே இல்லாத விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதல்வரின் ஆய்வு ஏன்?” - சி.வி.சண்முகம்

2 months ago 13

விழுப்புரம்: “வளர்ச்சியே இல்லாத விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதல்வர் என்ன வளர்ச்சியை ஆய்வு செய்ய வருகிறார்?” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 30 பேரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் குமரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோரும், விக்கிரவாண்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 40 பேரும் இன்று விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

Read Entire Article