சென்னை: “நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (பிப்.28) இரவு 8 மணிக்கு ஆஜராகிறேன்,” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த வழக்கு புதிது அல்ல. நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நான் ஏற்கெனவே 3 மணி நேரம் விளக்கம் அளித்துவிட்டேன். மறுபடியும் அதேதான். மீண்டும் ஒருமுறை அதை கேட்க ஆசைப்படுகின்றனர். சரி, அதை சொல்லிவிடுவோம். அவ்வளவுதானே.