வரும் 11ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம்

2 months ago 7

தஞ்சாவூர், டிச 5: பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, வரும் 11.12.2024 பேராவூரணி வட்டம், குருவிக்கரம்பை சரகம், குருவிக்கரம்பை -1 கிராமத்தில் ‘மக்கள் நேர்காணல் முகாம்’ நடத்த தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உத்தரவைத்துள்ளார். மேற்படி. ‘மக்கள் நேர்காணல் முகாம்’ பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், 29.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுவதற்கு முன்னரே முன்மனுக்கள் பெறும்பொருட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை குருவிக்கரம்பை -1 கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

The post வரும் 11ம் தேதி மக்கள் நேர்காணல் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article