வருசநாட்டில் விவசாயிகள் தெருமுனை பிரசாரம்

4 months ago 28

வருசநாடு, அக்.2: வருசநாடு கிராமத்தில் தமிழ் மாநில விவசாயதொழிலாளர்கள் சங்கம் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சித்திரவேல், பிச்சைமணி, தங்கப்பாண்டியன், பிகேஎம்யு செயலாளர் ராஜேந்திரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் பாண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பிரவீந்திரன், சென்ராம், குணசேகரன் பாலகிருஷ்ணன் வனராஜ் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

The post வருசநாட்டில் விவசாயிகள் தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Read Entire Article